“ நாம், நம் எல்லா பிறவிகளையும் போற்றுவோமாக ”
Ø நம் பிறப்பை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.
Ø நாம் வாழும் உலகை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.
Ø நம் பெற்றோரை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.
Ø நம் வாழ்வின் சட்டதிட்டங்களை நாமே தேர்ந்தெடுக்கிறோம்.
Ø நாம் இந்த உலகத்திற்கு காரணமின்றி வரவில்லை.
Ø நாம் யதேச்சையாக அன்னையின் கருவில் புகவில்லை.
Ø முந்தைய முடிவும், தேர்வும் இல்லாமல் இது நடக்கவில்லை.
Ø நாம் நம்முடைய பிறப்பை தேர்ந்தெடுத்து, முடிவெடுத்துள்ளோம்.
Ø விதிவசத்தால் இந்த உலகத்தில் பிறந்து விட்டோம் என வருந்தத் தேவையில்லை.
Ø நாம் இங்கே கொண்டாடுவதற்கும், குதூகலிப்பதற்கும் வந்திருக்கின்றோம்.
Ø இவை எல்லாமே நம்முடைய தேர்வும் முடிவெடுத்தலுமாகும்
Ø இந்த உலகை வழ்க்கையானது நம் ஆன்மாவிற்கு வளமான ஞானத்தைத் தரும்.
Ø ஒவ்வொரு அனுபவமும், “ஆன்மாவின் ஒட்டுமொத்த ஞானம்” எனும் துணியில் இழையாக சேர்க்கப்படுகின்றது.
Ø நாம், நம் அனைத்துப் பிறவிகளையும்
வரவேற்போமாக, போற்றுவோமாக.
Ø நாம், நம் அனைத்து அனுபவங்களையும்
வரவேற்போமாக, போற்றுவோமாக.
Ø நாம், நம் அனைத்து இன்ப, துன்பங்களையும்
வரவேற்போமாக, போற்றுவோமாக.
Ø நாம், நம் அனைத்து வெற்றி, தோல்விகளையும்
வரவேற்போமாக, போற்றுவோமாக.
Ø நாம், நம் அனைத்து உணர்ச்சிகளையும், புலன் உணர்வுகளையும்
வரவேற்போமாக, போற்றுவோமாக.